Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
பொருளாதார தொகைமதிப்பு Economic Census - 2025/26
பொருளாதார தொகைமதிப்பு 2025/26 விவசாய நடவடிக்கைகளுக்கான தொகைமதிப்பு எண்ணீட்டாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 2025.11.18 மற்றும் 2025.11.19 ஆகிய இரு தினங்களில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிர்வாக உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் ஆரம்பமான முதல்நாள் பயிற்சி வகுப்பில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் திரு.T.ஜெய்த்தனன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் வளவாளர்களாக புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பொது மக்களுக்கான அறிவித்தல்
அஸ்வெசும முதலாம் கட்டத்தில் (2022/23) விண்ணப்பித்த அனைவரும் (கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்பட்ட, தெரிவு செய்யப்படாத அனைவரும்) தங்களது தகவல்களை Online மூலம் மீள்சான்றுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
கீழ்க்குறிப்பிடப்படும் இணையத்தள முகவரியினுள் பிரவேசிப்பதன் மூலம் தங்களது தகவல்களை தாங்களே புதுப்பித்துக்கொள்ள முடியும்.
குறித்த செயற்பாட்டிற்கு தொலைபேசி இலக்கம் கட்டாயமானதாகும். தொலைபேசி இலக்கங்களில் மாற்றங்கள் இருப்பின் பிரதேச செயலகத்தினை அணுகி தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

பிரதேச இலக்கிய விழா - 2025

கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசால அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது 2025.11.04 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மு.ப 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
"அமைதியான, ஒழுக்கமான சிறந்த மனிதர்களைக் கொண்ட புனித தேசத்தினை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச கலைஞர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பல இடம்பெற்றிருந்ததுடன் கலைஞர் கௌரவிப்பு, பிரதேச இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கல், கலைநிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.












சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் கடந்த 2025.10.16 ஆம் திகதி வியாழக்கிழமையன்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட அடைவை அடைந்தமைக்காக பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் சமூக ஓய்வூதிய திட்ட விடய உத்தியோகத்தர் உள்ளிட்டோர் சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு 2025.11.03 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.






















