Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
அஸ்வெசும எண்ணீட்டு உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு - 2026.01.26
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குரிய அஸ்வெசும எண்ணீட்டு உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு 2026.01.26 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 12.30 மணிக்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரீதியாக எண்ணீட்டாளர்களான கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்தல் - 2026.01.01
2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 8.30 மணியளவில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் அரச சேவை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றியும், அவற்றை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் பிரதேச செயலாளர் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களால் புதுவருட விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வானது உத்தியோகத்தர்களின் கலைநிகழ்வுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.




பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு - 2025.12.22

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு 2025.12.22 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக பிரதேச செயலாளர் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான பிரஜாசக்தி செயற்திட்டத்தின் செயலாளர்களான சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதங்களை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





“DITWAH” இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நிவாரண சேகரிப்பு
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் இடம் பெற்ற “DITWAH” இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான உதவிக்கரம் நீட்டும் செயற்பாட்டில் எமது பிரதேச செயலக ரீதியாக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் பெறுமதி 2,496,209.00 ஆகும்.
பாதிக்கப்பட்ட எம்மக்களுக்காக உதவிக்கரம் நீட்டிய எமது பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள், நலன்விரும்பிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச்செயற்பாட்டில் பல்வேறு வழிகளிலும் உறுதுணையாக இருந்த எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரதேச செயலகம்,
மண்முனை தென்மேற்கு,
பட்டிப்பளை.



























