மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2026.05.13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களது தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2026.05.13 01
2026.05.13 02
2026.05.13 03
2026.05.13 04
 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிராமிய விளையாட்டுக்கள் மற்றும் கிராமிய பாடல்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு 2026.03.29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆதவன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2026.03.29 01

2026.03.29 02

2026.03.29 03

2026.03.29 04

2026.03.13 Banner

சமூக பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்த கிராமங்களை உருவாக்கும் அரசின் கொள்கைக்கு அமைய மண்முனை தென்மேற்கு பட்டிபளை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமான அரசடித்தீவு வடக்கு கிராமத்தில் இச்செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராம மக்களினால் சிரமதான நிகழ்வு கடந்த 2026.03.13 ஆம் திகதி நாடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், கிராம உத்தியோகத்தர் ஜீவிதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

2026.03.13 01

2026.03.13 02

2026.03.13 03

தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் எனும் நோக்கத்துடனான சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம் 2026.03.16 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் திரு.S.சுதாகர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு.E.திரேசகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம குழுத் தலைவர், உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இத்திட்டமானது கிராம மக்களின் உற்பத்தித்திறனை உயர்வடையச் செய்து நிலையான அபிவிருத்தியையும் வளமான சமூகத்தையும் உருவாக்கும் மிகமுக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2026.03.16 01
2026.03.16 02
2026.03.16 03

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 101 வயதுடைய அமரசிங்கம் கண்மணி என்பவருக்கு 100 வயதினை பூர்த்தி செய்த வயோதிபருக்கான கொடுப்பனவு காசோலை 2026.03.10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

2026.03.10 01

News & Events

14
மே2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
ஏப்2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top