Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
பௌர்ணமி கலைவிழா - 2025.03.13
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய பௌர்ணமி கலைவிழா நிகழ்வு 2025.03.13 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 5.30 மணிக்கு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பிரதேச தொழிற் சந்தை மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புக்கள் - 2025.03.06
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய பிரதேச தொழிற்சந்தை நிகழ்வு 2025.03.06 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 9.00 மணிக்கு மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சிறுபோக ஆரம்பக் கூட்டம் - 2025
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சிறுபோக ஆரம்பக் கூட்டமானது 2025.03.06 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. M.நவரூபரஞ்சனி அவர்களின் தலைமையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச பொங்கல் விழா - 2025
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பொங்கல் விழா பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் தலைமையில் 2025.02.05 ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெற்றது.
கடுக்காமுனை நெக்கட்டியடி ஸ்ரீ விக்கினேஸ்வரர் முத்து மாரியம்மன் ஆலய முன்றலில் கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கூத்து, வசந்தன், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்ற அதே வேளை அருவி வெட்டி புதிய அரிசி பெற்று பண்பாட்டியலோடு கூடிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
























