அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு - 2025.09.15
செய்திகள்
அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு - 2025.09.15
அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2025.09.15 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பி.ப 2.30 மணிக்கு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.