
கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசால அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது 2025.11.04 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மு.ப 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
"அமைதியான, ஒழுக்கமான சிறந்த மனிதர்களைக் கொண்ட புனித தேசத்தினை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச கலைஞர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பல இடம்பெற்றிருந்ததுடன் கலைஞர் கௌரவிப்பு, பிரதேச இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கல், கலைநிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


























