தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்வு 2025.09.12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.00 மணிக்கு மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு. S.பார்த்திபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்ததுடன் உடற்பயிற்சி வளவாளராக ஆசிரியை திருமதி. கஜேந்தினி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் உடற்பயிற்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















