உலக கவிதை தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிக்கூடல் 2025 நிகழ்வானது 2025.03.21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று மு.ப 9.55 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பான கவித்துளிகள் வடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















