மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சிறுபோக ஆரம்பக் கூட்டமானது 2025.03.06 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. M.நவரூபரஞ்சனி அவர்களின் தலைமையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.















