
சமூக பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்த கிராமங்களை உருவாக்கும் அரசின் கொள்கைக்கு அமைய மண்முனை தென்மேற்கு பட்டிபளை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமான அரசடித்தீவு வடக்கு கிராமத்தில் இச்செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராம மக்களினால் சிரமதான நிகழ்வு கடந்த 2026.03.13 ஆம் திகதி நாடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், கிராம உத்தியோகத்தர் ஜீவிதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

















