மூன்றாம் நாள் நிகழ்வு - 2026.03.07
தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் மூன்றாவது நாளான 2026.03.07 ஆம் திகதி சனிக்கிழமையன்று அத்தினத்தினை சிறப்பிக்கும் முகமாக விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் மற்றும் அதிதிகள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். அத்துடன் அம்பிளாந்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்வினை முன்னிட்டு அம்பிளாந்துறை கலாசார மண்டப வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
















