மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவுளியாமடு பிரதேசத்தில் நீண்ட காலமாக அடிப்படை தரநியமங்கள் அற்ற நிலையில் இயங்கி வந்த கெவுளியாமடு சத்துட்டுஉயன பாலர் பாடசாலைக்கு புதிய தரநியமங்களுடன் கூடிய மாதிரி பாலர் பாடசாலையை அமைக்கும் பொருட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திரு S.சுதாகர் அவர்களது தலைமையில் 05.03.2026 வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் S.பார்த்தீபன், மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் V.முரளிதரன், பிரதே செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் G.உமாறமணன், மங்களகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மங்களகம மகா வித்தியாலய அதிபர் சிவில் பாதுகாப் படைகளின் மங்களகம பிரதேச பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச பொதுமக்கள் குழந்தைகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஹேமாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள இந்த மாதிரி பாலர் பாடசாலை அப்பகுதியில் உள்ள முன்பிள்ளைகளுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை வழங்கும்.
நீண்டகாலமாக பெரும் வளப்பற்றாக்குறையுடனும் தர நியமங்களை பேணி கல்விச் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல முடியாத சூழலில் அப்பாலர் பாடசாலை இயங்கி வந்தது.
இப்புதிய பாலர் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டு வெகு விரைவில் அப்பிரதேச குழந்தைகளுக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அது எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளது உடல் மற்றும் உளரீதியான வளர்ச்சியை மேம்படுத்தி ஒரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க பெரும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும்.















