மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குரிய அஸ்வெசும எண்ணீட்டு உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு 2026.01.26 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 12.30 மணிக்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரீதியாக எண்ணீட்டாளர்களான கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















