
பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு 2025.12.22 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக பிரதேச செயலாளர் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான பிரஜாசக்தி செயற்திட்டத்தின் செயலாளர்களான சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதங்களை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















