Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கிணைவாக Seiri வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதான பணி 2025.09.02 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மு.ப 8.00 மணி முதல் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிரமதானத்தின் போது பிரதேச செயலக வளாகம் மற்றும் பிரதேச செயலகத்திற்கு முற்புறமாகவுள்ள வீதியோரங்கள் என்பன பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க உறுப்பினர்களின் பூரண பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















