அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 2025.09.03 ஆம் திகதி புதன்கிழமையன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















