மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான கருத்தரங்கு நிகழ்வு 2025.07.09 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் IFS - Global Enterprise Software Solution Provider நிறுவனத்தின் Principal Engineer திரு. M.Vikanaraj அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















