இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வானது மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் 2025.02.04 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும் Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகவும் அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர் அவர்களினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















