ஐந்தாம் நாள் நிகழ்வு - 2026.03.09
தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் இறுதி நாளான 2026.03.09 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பழமை வாய்ந்த இடங்களை பார்வையிட்டிருந்தனர்.
இந்நிகழ்விற்காக கம்பஹா மாவட்டத்தில் இருந்து வருகை தந்த சகோதர இன இளைஞர் யுவதிகள் அம்பிளாந்துறை கிராமத்தில் 5 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றி தங்களது பயணத்தை பயனுள்ளதாகவும் இனியதாகவும் மாற்றி 10.03.2026 இன்றைய தினம் மு.ப 9.30 மணியளவில் கம்பஹா நோக்கி புறப்பட்டனர்.















