நான்காம் நாள் நிகழ்வு - 2026.03.08
தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் நான்காம் நாளான 2026.03.08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று அம்பிளாந்துறை மேற்கு கதிரவன் விளையாட்டு மைதானத்தில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எமது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு. S. பார்த்தீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்றைய தினத்தின் இறுதி நிகழ்வாக தீப்பாசறை மற்றும் கிராமிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
















