
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகமும் முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமும் இணைந்து நடாத்திய பிரதேச பொங்கல் விழா நிகழ்வானது 2026.02.03 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அக்கிராம ஏனைய ஆலய பரிபாலன சபையினர், 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தலைவர் (வண்ணக்கர்), பாடசாலை இனியம் குழு, கிராம மட்டக் கலைஞர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகம், முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான கிராம அபிவிருத்தி சங்கங்களும் இணைந்து 27 வகையான பொங்கல்கள் பொங்கப்பட்டதுடன் பல்வேறு வகையான கலைநிகழ்வுகள், விஷேட பூசை இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வுடன் பொங்கல் விழா நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.



















